Wednesday, September 24, 2014

நவராத்திரி பூஜைமுறை



ஒன்பது தினங்களின் பூஜாக்ரமம்

நவராத்திரியில் கல்ப முறைப்படி பூஜை செய்ய இயலாதவர்கள் கீழ்கண்டபடி பூஜையைச் செய்து நற்பயனை அடையவும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான புஷ்பம், ஒன்பது வகையான அலங்காரம், எல்லாம் ஒன்பதாக அமைவதுடன் ஒவ்வொரு நாளும் இரண்டு வயது பெண்குழந்தை முதல் முறையே பத்து வயதுப்பெண் குழந்தை வரை ஒவ்வொன்றாகவோ, முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ, குமாரியை பூஜைச் செய்யவும். இதன் பலன் அளவிட்டுக் கூறமுடியாது.

மானஸீக பூஜை

நவராத்திரி ஒன்பது தினங்களிலும் மானஸிகமாக கீழ்கண்ட கீர்த்தனங்களால் பூஜை செய்துக் கொள்ளவும். இவ்விதம் ஒன்பது தினமும் பூஜை செய்து கொள்ளவும். இவ்விதம் ஒன்பது தினமும் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்தால் அம்பாளின் அனுகிரஹத்தால் சகல சௌபாக்கியத்தையும் காணலாம்.
(தினப்படி 9 நாளும் செய்ய வேண்டியது.)

ராகம் கௌளிபந்து

பல்லவி

ஆயாஹி மாதஸ்த்வம் பூயாஸ்தே பதயுகம்
த்யாயாமி ஹ்ருதி ஸததம் ஆயாஹி
(ஹ்ருதயே தேவீம் ஆவாஹயாமி)

அ. பல்லவி

ச்ரேயாம்ஸி மம ப்ருசம் மாயாமயிதயயா
தேஹி த்வத் பத பக்திம் பாஹி சரணாகதம்! - ஆயாஹி

சரணம்

பஞ்சப்ரம்மாத்க மஞ்சோபரிலஸித
பரமசிவ பர்யங்க ஸ்திதே
ஸஞ்சித நவரத்ந ஸஞ்சய விரசிதம்
சாருஸிம்ஹாஸ நம் ஸ்ரீ ஸ்வீகுரு பரசிவே! - ஆயாஹி
(ஸ்ரீ லலிதாயை மணிமய ஸிம்ஹாஸநம்க ல்பயாமி)

சந்தனம் குங்கும கஸ்தூரி கர்பூர
ஸஹிதேந ஸலிலேந தே பாத்யம்
ஸுந்தர தரவ்யக்த - ரக்தாக்ஷ தே நார்க்யம்
ஸுத்தேந ஆசமனம் ச ஸ்வீகுரு க்ருபயைவ - ஆயாஹி
சீதலம் அதிமதுரம் விஜிதாம்ருதம்
திவ்ய குஸும ஸீவாஸிதமமலம்
சாதகும்பமய கலசஸ்திகம் தோயம்
ஸ்நாநார்த்தம் ஸ்வீகுருதீந பாலன பரே ஆயாஹி
கஞ்சுக ஸஹிதகௌஸீம் பவஸ்த்ரயுகளம்
கனகாசல ஸஞ்சிதம் கமநீயம்
பஞ்சமி மயி தயயாஸங்க்ருஹா ணேதம்
பாவந யக்ஞோப வீதம் பரயா முதா ஆயாஹி

(ஸ்நபயாமி துகூலயுகளம் ஸமர்பயாமி யக்ஞோபவீதம் ஸமர்பயாமி)

ராகம் மத்யமாவதீ: தாளம் : ஆதி

பல்லவி

ஜய ஜய பார்வதி தேவி! சிவே!
ஜயமஹா ராக்ஞி சிவாதி நுதே! ஜய ஜய!

அ. பல்லவி

லயரஹிதே பவ பய விமோ சி நீ! நவ
நத்நா பரணாநி ஸமர்பயாமி முதாஹம் ஜய ஜய!
கஸ்தூரி கநஸாரகுங்கும ம்ருகமத
கமநீய பரிமள கர்தமேந ஸஹிதம்
சாந்தி ப்ரதே வரப்ரசஸ்த மலயஜம்தே
ஸர்வாவயவேஷு விலேபயாமி முதாஹம் ஜய ஜய

ஜாதி கேதகி ஜபா சம்பக வகுளாதி
ஸர்வவர குஸுமை: சர்வரீச சேகரே
பூஜயாமி சரண ராஜீவ யுகளம் மாம்
போஷய ச்ரிதவ்ரஜம் தோஷயகுரு ஸுகம் ஜய ஜய
புஷ்பம் ஸம்ர்பயாமி புஷ்பை: பூஜயாமி
கபிலாக்ருத கந்த குக்குலுமுக தசா
ங்காதி ஸுவாஸிதமதிருசிரம்
விபுலாயதநயனே க்ருபயைவைஸு
தூபம மும்ஸங்க்ருஹாண சிவே ஜய ஜய (தூபம் ஆக்ராபயாமி)
ஸீபா பூப க்ருதைட் ட நீ காதி
ஸுஸ்வாது சித்ராந்ந திவ்யாந்ந பக்ஷ்யாநிச
பாபா ரண்யதவே பநஸாம் ரம்

ஆதி பலாநி ஸர்வாண் யுரரீ குரு ஜய ஜய (நிவேதயாமி)
சாமீகரஸத்ருச வர்ணமதிம்ருதுளம்
கோமளதரமுக்தா சூர்ண ஸஹித மிதம்
தாமரஸ நயநே பூகி பலேந யுதம்
தாம்பூலம் அம்ப க்ருஹாணமுதா ஜய ஜய
ஸ்ரீ லலிதா தேவ்யை நம: தாம்பூலம் ஸமர்பயாமி

ராகம் தன்யாஸி தாளம் : ஆதி

பல்லவி

ஜய ஜய பாரதி தேவி சிவே
ஜய மஹா ராஜ ராஜேஸ்வரி லலிதே ஜய ஜய

அ. பல்லவி

கனகாசல ச்ருங்க வாஸீநி பாலே
கருணா பூர்ண கடாக்ஷ விசாலே ஜய ஜய

சரணம்

பக்தாச்ரித வ்ரஜ பாலிநி கௌரி
பரமேஸ்வரீ பாஹிமாம் கௌமாரி ஜய ஜய
(லலிதாயை நம கற்பூர நீராஞ்ஜநம் ஸமர்பயாமி)

முதல் நாள் மஹேச்வரி பாலா

அரிசி மாவால் பொட்டு வைத்துக் கோலம் போட வேண்டும். 2 வயது பெண் குழந்தைக்கு வாஸனைத் தைலத்தால் நீராடி ஆடை அணிவித்து குமாரிகா, பாலா என்று பூஜித்து சந்தனம் குங்குமம் விளையாட்டுப் பொருள் கொடுத்து மாஹேச்வரியாக வணங்க வேண்டும். வெண் பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை வில்வம் முதலியவைகளால் பூஜை செய்ய வேண்டும். பாடத் தெரிந்தவர்கள் தோடிராகக் கீர்த்தனங்களைப் பாடி பழமும் சுண்டலும் விநியோகம் செய்ய வேண்டும். தீக்ஷிதரின் ப்ரதமா வரண கீர்த்தனத்தைப் பாடவும்.

தியான ஸ்லோகம்

குமாரஸ்ய ச சத்வா நீ யாஸ்ருஜத்யபி லீலயா
காதீ நபி ச தேவாரந் தாந் குமாரீம் பூஜயாம்யஹம்

ஸ்தோத்திரம்

அருண கிரண ஜாலை: அஞ்ஜிதாவகாசா
வித்ருத, ஜபவடீகா புஸ்தகா பீதி
ஹஸ்தா இதரகர வராட்யா, புல்ல கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா

தேவ்யாததம் இதம் ஜகத் ஆத்மகத்யா
நிச்சேஷ், தேவகண சக்தி ஸமுகமூர்த்யா
தாம் அம்பிகாம் அகில தேவ மஹர்ஷி பூஜ்யாம்
பக்த்யா நதாஸ்ம விததாது சுபாநிஸாந:

ராகம் - நாத நாமாக்ரியா தாளம் - ஆதி

பல்லவி

ஏ ஹி கௌரி பூஜாம் க்ரஹீதும் ஏஹி கௌரி

அனுபல்லவி

பாஹி ஸததமிஹ தேஹி ஸீமதி மிதி
பாதவி நுத வெங்கடேச்வர
விநுதே ஏஹி கௌரி

சரணம்

மஹிஷ தனுஜ மதபேத நலோலுப
மாநஸதீந தயாபர மூர்தே
முஹுரமிதம் தவ வரபதஸரஸீ
ருஹ மஹ மிஹ ப்ரணமாமி பவாநி
அம்புஜ ஸம்பவ சம்பு விச்வம்பர
சம்பர ஜம்ப மதநமுகஸீர ரிபு
ஸும்ப நிஸும்ப நிபர்ஹிணி மாமிஹ
டிம்ப மவ ஸுகௌஸும்ப வர்ணாம்பரே
புக்தி முக்தி பலநே புவநே பரி
பூர்ண க்ருபே சிவபாமிநி பாலே
பக்தி யுக்த ஜந சித்த விஹாரே
பக்த கோடி பரிபாலந சீலே ஏஹி கௌரி

நாமாவளி

பர்வத ராஜ குமாரி பவானி
பாஹி மதுர மீனாக்ஷி ருத்ராணி
சங்கரி பகவதி பங்கஜ நயநே பாஹி
சிவே லலிதே பாஹி சிவே லலிதே பாஹி
என்று பிரார்த்தனை செய்து முதல் நாள் பூஜையை பூர்த்தி செய்யவும்.

நவராத்திரி பாடல்

நவராத்ரி திருநாளின் சக்தியே
முதல்நாள் இன்று அரசாளும் துர்க்கையே
சிவை நீயே குமரி எனும் தேவியே
திரு சிலைமேனி அலங்கரித்தோம் அன்னையே (நவராத்திரி)

கொலுமேடை அமைத்தோம் வீட்டிலே
அதில் அலைஅலையாய் ஓரொன்பது படிகளே
தெய்வத்திரு கோலங்கள் அணியிலே
இந்தத் திருநாளில் நாங்கள் உன் மடியிலே (நவராத்திரி)

நவநீரால் அபிஷேகம் செய்கிறோம்
நவ நவமான மலர்தூவி தொழுகிறோம்
நவராக இசைபாடி புகழ்கிறோம்
சக்தி சிவையே உன் சேவடியில் வாழ்கிறோம் (நவராத்திரி)

ஓரைந்து பேராற்றல் உன்னிடம்
எங்கள் உயிர்மூலம் ஒளிமூலம் உன்னிடம்
உலகங்கள் இயக்கங்கள் உன்திறம்
ஓம் ஓம் சக்தி தான் எங்கள் மந்திரம் (நவராத்திரி)

2ம் நாள் கௌமாரீ குமாரி

மூன்று வயதுப் பெண், கட்டம் போட்ட கோலம் பூலாங் கிழங்கு, மஞ்சள் கொடுத்து குமாரி என்று அழைத்துப் பூஜை செய்தல் விளையாட்டு பொருள் கல்யாணி ராகக் கீர்த்தனை, த்விதீயாவரணக் கீர்த்தனை பாடவும், முல்லைப்பூ, துளசி மாம்பழம் புளியோதரை வறுவல் இவைகளைப் பயன்படுத்தவும், குமாரிதேவிக்கு ஆடை ஆபரணம் உபசாரம் செய்து துதித்துப் போஜனம் செய்விக்கவும்.

தியான ஸ்லோகம்

சத்வாதிபி திரிமூர்த்திர் யா தைர் ஹி நாதாஸ்வரூபிணி
திரிகாலவ்யாபிநீ சக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம் யஹம்

ஸ்தோத்திரம்

யாஸ்ரீ ஸ்வயம் சுக்ருதினாம் பவநேஷு அஷ்டலஷ்மீ
பாபாத்மநாம் க்ருத தியாம் ஹ்ருதே யேஷு புத்தி

ச்ரத்தா ஸதாம் குலஜன ப்ரபவஸ்ய லஜ்ஜா
தாம் த்வாம் நதாஸ்ம பரிபாலய தேவி விச்வம்
யாதேவி ஸ்ர்வ பூதேஷீ விஷ்ணுமாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ராகம் பிஹாக் தாளம் ஆதி

பல்லவி

ஆயாஹி கௌரி அத்ரிகுமாரி ஆயாஹி கௌரி

அனுபல்லவி

ஆயதாப் ஜநயநே ஜகதாமதி நாயிகே
வரதே மயி தயயா ஆயாஹிகௌரி

சரணம்

ஸர்வபூத ஹ்ருதி வாஸிநி மாலிநி
ஸர்வபுவந ஸஞ்சாரிணி சூலிநி
ஸர்வ மக்த ஜநவ்ரஜ பரிபாலிநி
ஸர்வ மங்கள தாயிநி க்ருபயா ஆயாஹி

கமல வர ஸத்ருச கரபத யுகளே
காக்ஷிதார்த்த பலதாயிநி ஸகளே
ஸுமசரஸதி சகி சோபநசுரத்ருத
ஸுந்தரதர வர சாமர யுகளே ஆயாஹி
ஸகலபுவந பயமோசன நிபுணே
ஸர்வ கலதநுஜ குலமத ஹரணே
விகஸித கமல ஸமாந வதநே
வெங்கடேச விநுதே ருண கிரணே ஆயாஹி

நவராத்திரி பாடல்

ஹரி ஹரி சோதரி ராஜராஜேஸ்வரி
ஆலய வாசலில் கோலாட்டம் ஆலய வாசலில் கோலாட்டம்
அருள் நவராத்திரி இரண்டாம் நாளில்
துர்க்கையின் வாசலில் கோலாட்டம் துர்க்கையின் வாசலில் கோலாட்டம்
கொலுவிருக்கும் குங்கும வல்லியின்
குழந்தைகள் ஆடும் கோலாட்டம் குழந்தைகள் ஆடும் கோலாட்டம்
கோவில் குடும்பம் எங்கும் மங்கல
மங்கையர் பாடும் கோலாட்டம் மங்கையர் பாடும் கோலாட்டம் (ஹரி ஹரி)

பொட்டு வைத்து கோலம்இட்டு ஆடும் கோலாட்டம் ஆடும் கோலாட்டம்
நவதான்யம் நாம் படைத்து ஆடும் கோலாட்டம் ஆடும் கோலாட்டம்
மாவிலை தோரணம் வாசலில் கட்டி மகிழும் கோலாட்டம் மகிழும் கோலாட்டம்
மகிஷன் தன்னை வெல்லும் துர்க்கையை
வாழ்த்தும் கொண்டாட்டம் வாழ்த்தும் கொண்டாட்டம் (ஹரி ஹரி)

ஸ்ரீ வனதுர்க்கா சூலினி துர்க்கா த்ரிமூர்த்தி சந்நிதி கோலாட்டம்
த்ரிமூர்த்தி சந்நிதி கோலாட்டம்
ஜாத வேதா துர்க்கா சாந்தி போற்றும் கோலாட்டம்
துர்க்கையை போற்றும் கோலாட்டம்
சபரிதுர்க்கா ஜ்வாலா துர்க்கா அபயம் வேண்டும் கோலாட்டம்
அபயம் வேண்டும் கோலாட்டம்
ஸ்ரீவன துர்க்கா தீபதுர்க்கா ஆஸுரிதுர்க்கா உன் கொண்டாட்டம்
ஆஸுரி துர்க்கா உன் கொண்டாட்டம் (ஹரி ஹரி)

மஞ்சளுடன் குங்குமமும் வழங்கும் கோலாட்டம் வழங்கும் கோலாட்டம்
மலர்களுடன் கனி வகைகள் மணக்கும் கோலாட்டம் மணக்கும் கோலாட்டம்
மங்கையர் எல்லாம் சங்கமமாகி திரளும் கோலாட்டம் திரளும் கோலாட்டம்
மனைகள் தோறும் தீபங்கள் ஏற்றி வணங்கும் கொண்டாட்டம் வணங்கும் கொண்டாட்டம்

என்று ப்ரார்த்தனை செய்து 2ம் நாள் பூஜையை பூர்த்தி செய்யவும்.

3ம் நாள் வாராஹி கன்யா கல்யாணி

மலர்கள் உருவத்தில் கோலம் போடவும். சண்பகமெட்டு குங்குமம், முத்து, பவளம், இவைகளே தேவிக்கு ஸமர்ப்பித்துக் கொடுக்கவும். சம்பங்கி, மரு முதலிய வாசனைப் பூக்களால் பூஜிக்கவும். பலாப்பழ நிவேதம் சிறந்தது. வீணை வாத்தியம் காம்போதிராகக் கீர்த்தனை வாசிக்கவும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்துவிநியோகம் த்ருதீயாவரணக் கீர்த்தனை பாடவும்.

தியான ஸ்லோகம்

கல்யாண காரிணி நித்யம் பக்தாநாம் ந்மசஞ்சிதா நிவை
பூ ஐயாமி சதாம் பகத்யா கல்யாணீம் சர்வகாமதாம்

துதி

வைஷ்ணவி த்வம் வராரோஹே த்ராஹிமாம் ச பலாப்ரதே
விஹங்கம குலாதீசவரவாஹன வைபவே
ஏ ஹிவாராஹி மே பூத்யை புரதஸ் சக்ஷú÷ஷாரிஹ
ம்ருகாங்க கலசோத் தம்ஸே ம்ருகாதீச்வர வாஹனே
லஷ்மீ ப்ரதான ஸமயே நவ வித்ருமாபாம்
வித்யா ப்ரதான ஸமயே சரதித்து சுப்ராம்
வித்வேஷி வர்க விஜயேபி தமால நீலாம்
தேவீம் த்ரிலோகஜநநீம் சரணம் ப்ரபத்யே

ராகம் கல்யாணி தாளம் : ரூபகம்

பல்லவி

தேவி மஹா த்ரிபுர ஸுந்தரி ஸததம் ஸுமதிம்
தேஹிமே பவாநி சங்கரி

அனுபல்லவி
ஸ்ரீ வல்லபாதி ஸுரேந்தர பூஜிதே
திவ்யௌக ஸித்தௌõக மாநௌ வந்திதே
லாவண்ய வாரிநிதே ஸகலே சது
ரங்கபலேச்வர்யாதி மங்களதே பரதேவி
காமேச்வர்யாதி நித்யௌக பரிவ்ருதே
காலராத்ர்யா தியுதே சிவ ஸஹிதே
ஸோமேந்த்ர சங்கர தூர்வாஸோ பாஸிதே
ஸுக்த த்ரயேண ப்ரம்மேச ஹரி நுதே தேவி மஹா
த்ரைலோக்ய மோஹந சக்ராதி ராஜித
த்ரிபுர மத்யல ஸத்பிந்து பீடஸ்தே
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய
ஸம்பத் ப்ரதே ஸர்வஸாக்ஷிணி மாமவ தேவி
பக்தப்ரியே வெங்கடேசநுதே பஞ்ச
பஞ்சிகாலக்ஷிதே பாநுஸமப்ரபே
ரக்தாம் சுகேந விலஸத்களேபரே
ராஜ ராஜேச்வரி ராஜத்க்ருபே பர தேவி

நவராத்திரி பாடல்

சங்கவி சாம்பவி நவ துர்க்கா ஸ்ரீ சண்டிகை பகவதி சிவ துர்க்கா
மகிஷன் தலைமேல் சூலத்துடன்...
நின்று மணிமுடி சூடிய ஜெயதுர்க்கா துர்க்கா (சங்கரி)
மூன்றாம் நாளின் அம்பிகையே அருள்முகிலே பஞ்சாதாட்சரியே
காளிபவானி கொற்றவையே
திருகழல்கள் சரணம் ஓம் சக்தியே (சங்கரி)
அஷ்டகாளியாய் திகழ்பவளே நடம் ஆடும் ஊர்த்துவம் படைத்தவளே
சப்தசதியின் மா காளி...
உன் சந்நிதி அடைந்தேன் மலை நீலி (சங்கரி)

4ம் நாள் மஹாலெஷ்மி ரோஹிணி

அக்ஷதையினால் படிக்கட்டு போலக் கோலம் போடல் கஸ்தூரி மஞ்சள் ரோஜா மொட்டு, பன்னீர் வாசனைத் தைலம் இவைகளால் உபசரிக்கவும், பவளம் முத்துமாலைகள் அணிவிக்கவும். தயிரன்னம் நிவேதனம் பைரவி ராகப் பாடல் கொட்டு வாத்தியம் வாசிக்கவும் ஜாதிப்பூக்களால் பூஜிக்கவும்.

தீக்ஷிதரின் சதுர்த்தாவரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

ரோஹ்யந்தி ச பீஜாநி ப்ராக்ஜ ந்மசஞ்சிதா நிவை
யாதேவி சர்வபூதாநாம் ரோகிணீம் பூஜாயாம்யஹம்

துதி

தேவி ப்ரபந்நார்தி ஹரே ப்ரஸீத ப்ரஸுத மாத ஜகதோ கிலஸ்ய
ப்ரஸீத விச்வேச்வரி பாஹிவிச்வம் த்வம் ஈச்வரிதேவி சராசரஸ்ய
ஆதார பூதா ஜகத த்வமேகா மஹீஸ்வரூபேண
அப்ரம் ஸ்வரூபஸ்திதயார்த்ருத்யை யதஸ்திதாஸி
ஆப்யாயதே க்ருத்ஸ்நம் அலங்க்யவீர்யே

ராகம் ஸெளராஷ்ட்ரம் தாளம் ரூபகம்

ஸீரபூஜித சரணாம்புஜே பரமேச்வரி லலிதே
கருணாம் குருசரணாகதே காமேச்வரி வநிதே ஸீரபூஜிதே
ஸததம் தவ பதஸாரஸம் ஹ்ருதி சிந்திதும் வரதே
நிதராம் மதிம் மமதேஹ்யது திரு மாச்ரித சுகதே ஸுர
வரதா பல ஸரஸீருஹ வதநே மணிஸதநே
புரசாசந விதி கோவிந்த முகஸேவித சரணே
ஸகலாகம விநுதாம்ருத சரிதே சிவஸ ஹிதே
மகரத் வஜ கரபூஜித மணி பாதுகாலஸிதே ஸுர

நவராத்திரி பாடல்

மகாலக்ஷ்மி ஜெய லக்ஷ்மி திருமிகு தேவி
உயர் மங்கலமாம் நவராத்திரி தரிசனச் செல்வி
நாரணியே செந்திருவெ மலரடி போற்றி
இன்று நான்காம் நாள் அரசாளும் திருவடி போற்றி

கஜ லக்ஷ்மி ஆதிலக்ஷ்மி சரணம் சரணம்
சந்தானலக்ஷ்மி தனலக்ஷ்மி சரணம் சரணம்
தனலக்ஷ்மி விஜயலக்ஷ்மி சரணம் சரணம்
வீரலக்ஷ்மி மகாலக்ஷ்மி சரணம் சரணம்

சுமங்கலி நீ பாற்கடலின் அமுதமும் நீயே
அருள் ஸ்வர்ணவல்லி அஷ்டலக்ஷ்மி பார்கவி நீயே
சஞ்சலை நீ சபலை நீ வைணவி நீயே
உன் சந்நிதியோ திருமாலின் நெஞ்சகம் தாயே

மங்கயரை அழைத்து வந்து விருந்து வைத்தோமே
உன்மகள் உன்னை அலங்கரித்து மலரும் தந்தோமே
செந்நிறமாம் ஸ்ரீசூர்ணம் தீட்டிக் கொண்டோமே
ஒரு செந்தாமரை மலர் நிழலில் வாழ்வு கண்டோமே

சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்
மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்
மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்
வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்

5ம் நாள் வைஷ்ணவி

கடலைமாவால் பக்ஷிகள் போலக் கோலம், பிரௌடா என்று அழைக்கவும் வாஸனைத் திரவ்யம்: தைலம் முதலியவற்றால் உபசரிக்கவும். ஜல்லரி வாத்யம், பந்துவராளி ராகம் பாடித்துதிக்கவும். மஞ்சப் பொங்கல் வடாம் பாயஸம் இவைகளால் உபசரிக்கவும். பஞ்சமாவரணக் கீர்த்தனையைப் பாடி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

காளி காலயதே சர்வம் ப்ரஹ்மாண்டம் சராசரம்
கல்பாந்த சமயே யாதாம் காளியாம் பூஜாயாம்யஹம்

துதி

த்வம் வைஷ்ணவீ சக்தீ அனந்த வீர்யா
விச்வஸய பீஜம் பரமாஸிமாயா
ஸம்மோ ஹிதம் தேவி ஸமஸ்த
மேதத் வம் வைப்ரஸந்நா புவி முக்தி ஹேது
யாதேவீ ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸமஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:

ராகம் வஸந்தம் தாளம் ஆதி

பல்லவி

நஹிவாதே க்ருணா நஹிவாதே லலிதே

அனுபல்லவி

மிஹிரா ப்ஜேந்த்ரா ஸஹிதா ஜாதி
ஸஹிதே தாதும் வரம் பரிபாதும் நஹிவா
மாதாத்வம்மே ப்ராதா த்வம் தாதஸத்வம்மே
ஸர்வம் த்வம்மே நஹிவா
நதபாலநத்வம் நஹிவா வதத்வம் ச்ரிதமந்தாரே
ஜகதாதாரே நஹிவா
ஸுவரவிநுதே ஸுந்தரசரிதே வரகரதேச
வெங்கடேச நஹிவா.

நவராத்திர பாடல்

கமல மலரணையில் கனகச்சிலை வடிவில்
திகழும் அன்னையடி கிளியே தேவி லக்ஷ்மியே (கமல)

அருளும் நவராத்திரி ஐந்தாம் நாள் அசுரன்
தூது கேட்டாளடி கிளியே தோற்றம் காண்பாயடி (கமல)

செல்வ மழை பொழிய சிகப்புத்தாமரையில்
திருமகள் வந்தாளடி கிளியே திருவடி சேர்வோமடி (கமல)

சங்க நிதியென்றும் பதும நிதியென்றும் அள்ளித் தருவாளடி
அவளைத் தொழுவோமடி (கமல)

6ம் நாள் இந்திராணி (காளிகா) என்று அழைக்கவும்

பருப்பு மாவால் தேவி நாமத்தால் கோலம் வரையவும். ரத்ன மாலைகள் அணிவிக்கவும் குங்குமப்பூ பாரிஜாதம் விபூதிப்பச்சை செம்பருத்தி முதலிய பூக்களால் பூஜிக்கவும், மிருதங்க வாத்தியத்துடன் நீலாம்பரி ராகம் பாடி ஆராதிக்கவும். மாதுளை ஆரஞ்சு பழம் விநியோகம் தேங்காய்ச் சாதம் நிவேதனம் செய்து துதிக்கவும். சஷ்டமாவரணக் கீர்த்தனையை சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

சண்டிகாம் சண்டரூபாம் ச சண்ட முண்ட விநாஸிநீம்
தாம் சண்டபாபஹரிணிம் சண்டிகாம் பூஜயாம்யஹம்

ஸ்தோத்திரம்

தேவி ப்ரஸீத பரிபாலய நோ அரிபீதே :
நித்யம் யதா அஸுர வதாத் அதுநைவஸதய:
பாபாநி ஸர்வஜகதாம் ப்ரசமம்நயாசு
உத்பாத பாகஜநிதாம்ஸ்ச மஹாப ஸர்காந்
ப்ரணதா நாம் ப்ரஸுத த்வம்
தேவி விச்வார்த்தி ஹாரிணி
த்ரைலோக்ய லாஸிநாம் சட்யே
லோகா நாம் வரதா பவ.

ராகம்: ஆநந்தபைரவி தாளம் ரூபகம்

அம்பா மாதி பராசக்தி ஜகதாதாராம் கருணாஸாராம்
அம்போஜாஸந ஸம்பாவ்யாம பர மாநந்தரூபாம் பஜாமி ஸதா அம்பாம்

சிந்தாரத் நக்ருஹத்வாரே ஸுரஸேவிதவைபவ விஸ்தாரே
இந்த்ராண்யாத்யதிநந்த்யாம் ஸ்ரீஜகதீசாதிம் ப்ரணமாமி முதா அம்பாம்

சங்கரி சாம்பவி சைலஸுதே சந்த்ரகாலாதர சம்புயுதே
பங்கஜ லோசநபூஜிதபாவந பாதஸரோருஹே பாலயமாம் அம்பாம்

நவராத்திரி பாடல்

பொன்னான அன்னை ஸ்ரீலக்ஷ்மியே புகழ்பாடி வந்தேன் மகாலக்ஷ்மியே
அன்பான தெய்வம் நீயல்லவோ அலமேலு மங்கைத் தாயல்லவோ (பொன்னான)

அம்மா உன்காட்சி நவமங்கலம் ஆறாம் நாள் மேடை ஷர்பாசனம்
பூமேனி கோலம் ஸ்ரீ சண்டிகா பொருள்யாவும் தருகின்ற சாகம்பரி நீ (பொன்னான)

நவரத்ன மாலை அலங்காரமே நவதான்யம் படைத்து அபிஷேகம்
நவநாமம் கூறும் என்பாடலே நவசக்தி பீடம் தான் உன் வாசலே (பொன்னான)

கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன
உள்ளாரைக் கண்டால் ஊர் வாழ்த்துமே உன்னாலதான் மேன்மையெல்லாம் உண்டாகுமே ( பொன்னான)

7ம் நாள் மஹாஸரஸ்வதி ஸுமங்கலீ

மலர்களால் மேடையில் கோலம் போடல், நலுங்கு மஞ்சள் உபசாரம், தாழம்பூ தும்பை இவைகளால் பூஜை புஷ்பராக மாலை அணிவித்தால் பேரீவாத்தியத்துடன் பிலஹரிராக கீர்த்தனை பாடி எலுமிச்சம் பழரஸாந்தம் ஸத்துமா நிவேதனம் செய்து விநியோகிக்கவும். சப்தமாவரணக் கீர்த்தனையை சொல்லி பூஜிக்கவும்

தியான ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்தி: யந்மயை : பரிகீர்த்திகா
யஸ்யாஸ் தாமசுகதாம் தேவீம் சாம்பவீம் புஜயாம்யஹம்

துதி

ச்ரியம்ஸமஸ்தரம்நிகிலா திவாஸாம்
மஹாஸுலக்ஷ்மீம் தரணீ தரானாம்
அநாதிம் ஆதிம் பரமாத்ம ரூபாம்
த்வாம் விச்வயோநிம் சரணம் ப்ரபத்யே
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
க்ருஹீத வைஷ்ணவீருபே நாராயணி நமோஸ்துதே

ராகம் மதயமாவதி தாளம் ரூபகம்

பல்லவி

சிவகாமேச்வரி சங்கரி த்ரிபுரேச்வரி லலிதே சிவ

அநுபல்லவி

பவவிமோசநநிபுணே ச்ரிதேபரி பாலநசரிதே சிவ

சரணம்

நவகோமள ம்ருதுளாத்புத நளிநாயதநயதே
பவஸாகர பதிதேமயி வரதாபவஸக்ருணே
தபநீயாம்சுக ராஜித தருணாருண காத்ரே
க்ருபயைவஹி பரிபாலய - சபராயதநேத்ரே சிவ
ஸங்கடார்த்திவிநாசிநி - ம்ருதுபாஷிணி ஜகஜ்ஜனநி
வேங்கடேச விநுதாம்ருத - சரிதே சிவஸஹிதே சிவ

நவராத்திரி பாடல்

சரஸ்வதி தாயே கலைமகள் நீயே
அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே
ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி
இன்னும் இருநாள் உனதருளாட்சி (சரஸ்வதி)

கல்விக்கலைகள் தரும் தாட்சாயிணி
உன் அன்பில் நான்முகன் மகிழும் நாயகி
சண்டன் முண்டன் அசுரரை வென்றாய்
பொன் னெழில் மின்னிடும் கீதமும் தந்தாய் (சரஸ்வதி)

கன்னிப் பூஜையும் சுவாசினிப் பூஜையும்
கருதிப் புரிந்தோம் கனிந்தருள் அம்மா
என்னைப் படைத்தாய் இசையும் படைத்தாய்
இணைத்தாய் தாயே உனைக்கிணை வருமா (சரஸ்வதி)

8ம் நாள் நாரஸிம்மி தருணீ

பத்ம (தாமரை பூ போன்ற) கோலம் கஸ்தூரி பச்சை மஞ்சள் தைலம் இவைகளால் உபசாரம் மரகதப் பச்சை மாலை அணிவித்தல் மருதோன்றிப் பூ ஸம்பங்கி பூக்களால் பூஜை பாலன்னம் நிவேதனம் கும்மியடித்தல் புன்னாகவராளி பாடித்துதித்தல் ஆகியவை முக்கியம்.

அஷ்டமாவரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

துர்க்கா தராயதி பக்தயாம் சதா துர்க்கார்த்தி நாசி நீ
துர்ஜ்ஞேயா சர்வதேவா நாம் தாம் துர்காம் பூஜயாம்யஹம்

துதி

ரோகாந் அ÷ஷாந் அபஹம்ஸிதுஷ்டா
ருஷ்டாது காமாந் ஸகலாந் அபீஷ்டான்
த்வாம் ஆச்ரிதா நாம் நவிபந் நாராயணாம்
த்வாம் ஆச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ராயந்தி
வித்யாஸு சாஸ்த்ரேஷு விவேகதீபேஷு
ஆத்யேஷு வாக்யேஷு ச காத்வதந்யா
மமத்வ கர்தே அதிமஹாந்த சாரே
விப்ராயமயத்யேகத் அதீவ விச்வம்

8. ராகம் சங்கராபரணம்

ஸ்ரீதேவி ஜயதேவி சிவகாமேச்வரிராக்ஞி
மேதேஹி பதபக்திம் மேருமஹாகிரி நிலயே
காமேச்வர்யா திவ்ருதே கமநீயாம்சுகஸஹிதே
மாமிஹபாலயலலிதே மதுவைரிமுகவிதுநுதே
குங்கும பங்கித தேஹே குருவிந்தமணிகேஹே
பங்கஜ ஸம்பவ விநுதே பாஹி ஸதாசிவ ஸஹிதே
ஸேவாம் கசோமிபதே ஸிம்ஹாஸநேச்வரி தே
ஸ்ரீவெங்கடேநுதே சிவகாமேச்வரஸஹிதே

நவராத்திரி பாடல்

வெள்ளைத் தாமரைப் பூவில் பொருந்திய
தேவியை வாழ்த்துங்கடி நம் தேவியை வாழ்த்துங்கடி
வீணையை ஏந்தும் சரஸ்வதி தாயை
பாடிக் கும்மியடி புகழ்பாடிக் கும்மியடி (வெள்ளை)

நவராத்திரியின் எட்டாம் நாளின்
அம்பிகை பாருங்கடி அருள் அம்பிகை பாருங்கடி
ரத்தவிகனை வென்றவள் மேன்மையை
சொல்லிக் கும்மியடி சீர் சொல்லிக் கும்மியடி (வெள்ளை)

எண்ணும் எழுத்தும் உன்னால் வந்தது
எங்கும் கூறுங்கடி அடி எங்கும் கூறுங்கடி
அன்னை சரஸ்வதி அறிவின் தெய்வம்
ஆடிக்கும்மியடி கொண்டாடிக் கும்மியடி (வெள்ளை)

மாவில் சித்திரக்கோலம் வரைந்து
சுழன்று வாருங்கடி சுற்றி சுழன்று வாருங்கடி
மங்கல நாயகி பொன்னடி சேர்ந்து
மகிழ்ந்து கும்மியடி மனம் மகிழ்ந்து கும்மியடி (வெள்ளை)

9ம் நாள் சமுண்டீ மாதா

வாஸனைப் பொடியால் ஆயுதம் போல கோலம் போடல் கோரோசனை பன்னீர் தைலம் இவைகள் உபசாரம் வைர ஆபரணம் சேர்ப்பித்தல், தாமரை மருக்கொழுந்து இவைகளால் பூஜித்தல் கோலாட்டம் அடித்தல் வஸந்தராகக் கீர்த்தனம் குளாந்நம் செய்து விநியோகம் நவமாவ்ரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்.

தியான ஸ்லோகம்

சுபத்ராணி சபக்தா நாம் குருதே பூஜிதா சதகா
அபத்ரநஸிநீ தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

9. ராகம் காம்போதி தாளம் சாப்

ஸ்ரீ மத்ஸிம்மாஸனி தீச்வரி சாம்பவி ஸ்ரீ தேவி சிவ
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதாதிரிபுரேச்வரி பாலய
காமேச்வரஹ்லாத காரிணி ஸ்ரீ பத்மகாநத மத்யஸ்திதே
காமேச்வரி சிவசங்கரி கல்யாணி கமலாஸநி பாலய
மங்கள சுகப்ரதே வெங்கடேச்வரநுதே ஸ்ரீ தேவி தேவி சிவே
ஸ்ரீ பார்வதி ஜகந்நாயிகே ஸ்ரீமாதஸ்திரிபுரேச்வரி பாலய

ஸர்வஸ்வரூபே வர்வேசே ஸர்வ சக்திஸமந்விதே
பயேப்யஸ் த்ராஹிநோதேவி துர்கேதேவி நமோஸ்துதே
ஏதத்தே வதகநம் ஸெளம்யம் லோசநத்ரய பூஷிதம்
பாதுந: ஸர்வபூதேப்ய காத்யாயநி நமோஸ்துதே
என்று பிரார்த்திக்கவும்.

நவராத்திரி பாடல்

நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே
நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே (நாமகளே)

அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே
சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே (நாமகளே)

கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே
நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே (நாமகளே)

தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும்
ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும் (நாமகளே)

நவராத்திரி நிறைவுநாள் சிவலிங்கத்தை பூஜிக்கும் சிவசக்தி ஐக்யஸ்வரூபிணி

சிவசக்தித் தாயே வருக உன் சீர்பாடித் தொழுதோம் வருக
நவராத்திரி நிறைவானதம்மா
வரும் காலம் நாளும் உனதாகுமே (சிவ சக்தி)

ஸ்ரீ சக்தி மலர்பாதம் போற்றி ஓம் சக்தி மணிப்பாதம் போற்றி
அருள்சக்தி திருப்பாதம் போற்றி சிவ சக்தி பொற்பாதம் போற்றி

சிவலிங்க பூஜை புரிக தெய்வ சன்மார்க்கம் தேடிப் பெருக
உவமைக்கு பொருளேது அம்மா
என் உயிரே உணர்வே உமையன்னையே (சிவசக்தி)

ஒன்றாகப் பூத்தாய் திருவே நன்மை ஒவ்வொன்றும் படைக்கும் கருவே
நல்வாழ்வுடன் உன் பார்வையம்மா
மனம் நாடும்பாடும் ஜெகதீஸ்வரி (சிவ சக்தி)

தெய்வீகத் தாய் உன் காட்சி அன்பின்திறம் பாடும்அருளின் சாட்சி
கண்டார்க்கு கொண்டாட்டம் அம்மா
சிவ கனியே மணியே பரமேஸ்வரி

நவராத்திரி பாடல்

நவராத்திரி என்றதும் மங்கையர் எங்களின்
மனமது தேர்ச்சியை பெற்றதம்மா
கவனமாய்க் கொலுதனை உயர்ந்ததாய் வைத்திட
உள்ளமும் மோகத்தைக் கொண்டதம்மா
படிப்படியாகவே பல வித பொம்மையை
விதவிதமாகவே வைத்தோமம்மா
அடிக்கடி பார்த்தாலும் மனமது சலிக்காமல்
பார்த்தே மனம்களி கொண்டோமம்மா
அந்திவேளைதனில் பட்டாடை கட்டியே
அலங்காரம் முழுவதும் செய்து கொண்டோம்
பக்தியாய்க் குங்கும குப்பியுடன் கூடத்
தையல்கள் பலபேரைக் கூட்டி வந்தோம்
பலவித ரூபத்தில் தேவி கொலுவிலே
பரிவுடன் அமர்ந்திட்ட விந்தையதை நீ
கலைவாணி தேவியே பத்மாக்ஷி லக்ஷ்மியே
பார்வதியே என்று பாடினோமே.
ராகாதி எதிரிகள் மனம் வாடிச் சுண்டிட
சுண்டலை செய்துமே வைத்தோமம்மா
பாங்காய் நீ இன்புறத் தித்திப்பு பக்ஷணம்
என்றதை உனக்குமே தந்தோமம்மா
பக்தராம் எங்களின் ஆர்த்தியைப் போக்கிட
பங்கஜ பாதத்தை நமஸ்கரித்தோம்
முத்தால ஹாரத்தி உந்தனுக்கே சுற்றி
மூன்றான சக்தியை போற்றி நின்றோம்
வந்த பெண் யாவரும் உந்தனின் ரூபமே
என்றுமே மனமதைத் தேற்றிக்கொண்டோமே
சந்தனம் பூசியே மஞ்சளாம் குங்குமம்
வெற்றிலை பாக்கையும் தந்து நின்றோம்
உந்தனின் ராத்திரி ஒன்பது ஒருமிக்க
சந்தோஷமாக சென்றதம்மா
பிந்தியும் நீவர வருஷமும் ஒன்றாகும்
என்றுமே மனம் உன்னை நாடுதம்மா
சந்ததம் நீ உந்தன் சேய்களாம் எங்களை
சொந்தமுடன் காக்க வேண்டுமென்றே
அந்தரங்க பக்தி கொண்டுமே பாடிடும்
சுந்தர வார்த்தையை கேளுமம்மா.

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

No comments:

Post a Comment