Saturday, September 6, 2014

சில சித்தர்கள் அசைவ உணவு சாபிட்டாதக சொல்வது உண்மையா?

இறைவனை உணர்ந்த எந்த ஞானியும் , சித்தரும் அசைவம் உண்ண வில்லை. பரிபாசையாக கூறி உள்ள விசயங்களை சரியாக தெரிந்து கொள்ளாததனால் தான் இவ்வாறு தவறான கருத்துக்கள் தோன்றி உள்ளது  .
அசைவம் உண்பவன் ஞானி அல்ல. கீழ் கண்ட வள்ளலாரின் பாடல் இதற்கு சான்று :
”மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்துவயங்கும் அப்பெண்  
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்   
கருவாணை யற இரங்கா  துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்தனேல்
எங்    குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே”
2-ம் திருமுறை   -திருவருட்பா
ஒருவன் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ,இறந்தவரை எழுப்பவும் வல்லவனாயினும் அவன் புலால் உண்ணும் கருத்துடையவனாயின் அவன் ஞானியல்ல !? புலால் உண்பவனல்ல அந்த கருத்துடையவானாயினும் அவன்ஞானியல்ல கேவலம் மனித மிருகமே!? இது என் குரு மீது ஆணை சிவத்தின் மீதும் ஆணை என்று அறுதியிட்டு கூறுகிறார் வள்ளலார்!
மேலும்
‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள்  எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறினத்தார்!”  என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.

No comments:

Post a Comment