Friday, September 12, 2014

மனதை எப்படி அடக்குவது ?

சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே

பாடல்
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

பொருள்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே = சொல்லும் மனமும் கடந்து நின்ற மறையோனே

கறந்தபால் = அப்போதுதான் கறந்த பாலோடு

கன்னலொடு= கன்னல் என்றால் கரும்பு. இங்கே சர்க்கரை

நெய்கலந்தாற் போலச் = நெய் கலந்தார்ப் போல

சிறந்தடியார் = சிறந்து அடியார்

சிந்தனையுள் = சிந்தனையுள்

தேனூறி நின்று = தேன் ஊற நின்ற

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் = பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் பெருமான்

ஏதோ மாணிக்க வாசகர் சர்கரைப் பொங்கல் செய்வதற்கு சொல்லித் தருவது போல இருக்கிறதா ?

அப்படி அல்ல.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார்.






எல்லோரும் இன்பம் வேண்டும், இன்பம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

ஆசை புலன்கள் வழி வருகிறது.

புலன்கள் மனதால் செலுத்தப் படுகிறது.

புலன்களை அடக்க வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும்.

மனதை எப்படி அடக்குவது ?

அது தான் சிக்கலான விஷயம்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை கட்டுப் படுத்த நினைக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அது நம்மை மீறிச் செல்லும்.

மருந்து சாப்பிடுவதற்கு முன் குரங்கை நினைக்காதே என்றால் கட்டாயம் நினைக்கும்.

மனதை அடக்குவது என்றால் எது மனதை அடக்கும் ?

மனம் தான் மனதை அடக்க வேண்டும். அது எப்படி மனமே மனதை அடக்க முடியும் ?

மனதை அடக்க இரண்டு வழிகள்.

ஒன்று , மனதை ஒன்றில் இலயிக்க விடுவது. மனம் ஒன்றில் இலயித்து விட்டால் வேறு ஒன்றின் பின்னால் போகாது.

ஆனால் , இந்த இலயிப்பு நிரந்தரமாக இருக்காது. இலயிப்பு தீரும்போது, மீண்டும் மனம் அதன் வழியில் தறி கேட்டு ஓட ஆரம்பிக்கும்.

அதற்கு நிரந்திர தீர்வு, "மனோ நாசம்".

மனமே இல்லை என்றால் ?

இதைத்தான் மனோ நாசம் என்கிறார்கள். மனோ நாசம் செய்ய சிவத்துடன் கலந்துவிடு சிவா நாமம் ஒன்றே இதற்க்கு வழி கொடுக்கும்

No comments:

Post a Comment