Wednesday, January 28, 2015

சொல்லும் பொருளும்



நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க

சொல்லும் பொருளும் :

தாள் -  திருவடி
கோகழி – திருவாவடுதுறை
குருமணிதன் – குருவாகிய மாணிக்கம்
ஆகமம் – வேதம்
ஏகன் – ஒருவன்
பிஞ்ஞகன் – சிவபிரான்
கழல் – பாதம், திருவடி
சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்
கோன் – அரசன்
சீரார் பெருந்துறை – திருப்பெருந்துறை
தேசன் – ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் – நெற்றிக் கண்ணை உடையவன் (சிவபெருமான்)
மிக்காய் – கொண்டுள்ள(வன்)
நேயம் – அன்பு
நிமலன் – அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் – செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு….
விருகம் – மிருகம்
வீடுபேறு – மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை – காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் – காளை வாகனமுடைய சிவன்
இயமானன் – யாகம் செய்விப்பவன்
பெம்மான் – சிவன்
கன்னல் – கரும்பு
தேற்றனே – தெளிவானவனே
எங்கும் நிறைந்து யாவுமாகி நின்ற சிவனே உந்தன் திருவடி சரணம் ! சிவாய நம ஓம்

No comments:

Post a Comment