Wednesday, January 28, 2015

இருதயக் காப்பு மந்திரம்



கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர்.

இருதயக் காப்பு மந்திரம் :

அங்காதங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ருஹாமி தே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

இதயக் கவசத் துதி தமிழில் : 

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்

சிறிதளவு நெய் விட்டு லேசாக வறுத்த 10 பூண்டு பற்களை திங்கட் கிழமை தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கி இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment