Monday, March 23, 2015

எண்ண அலைகளும்ஆழ்மன ஈடுபாடும்

உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன இந்த உண்மையைஅணு விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்து வமே அதுதான். உங்களுக்கு தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும். எதை சாதிக்க விரும்புகிறோமோஅதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழு த்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காண தீர்வு வழி முறைகள்: ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்அது வெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.


அந்த விருப்பமானது நிறைவேற்ற முயற்சிதேவை. சரிமுயற்சி செய்கிறோம்.எப்போது சாத்தியப்படும்." விரும்பியதை அடைய முடியும்என்கிற நம்பி க்கை இருந்தால் தான் முயற் சியும் சாத்திய மாகிறது." மின் அலைகள்பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களைபாதிக்கின்றன. அணைத்து பொருள்களும் அலை வடிவங் களாகத் தான் இயங்கி கொண்டிருக் கின்றன.நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன. வலிமையான எண்ணங்களின்மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.


ஆழ்மனதைபயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயா ராக இருக்கிறது.ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர் ந்திருக்கி றார் கள்.மனிதனின்எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோ ஷிஸ்' என்றுஅழைக்கப்படுகிறது.நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த சக்தி யைப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.தனிமனிதனானாலும் சமூகமானாலும்ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும்நனை பெறத் தொடங்குகின்றன.


மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.ஆழ்மனசக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல்எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை.கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும் ஆழ் மனசக்திகள்எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும்அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.


அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும்கூட., எந்தசக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாகஇயங்கு கிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை.செய்ய முடியா தது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை. எண்ணங்களின் தன்மை அறிந்துகொள்ளும்போது, எண்ணம் தனக்குரிய இடத்தில் தன்னை வைத்து கொள்ளும்...எண்ணமே இருக்க கூடாதுஎன்பது இல்லை.. அதற்கு என இடம் உண்டு.. இந்த தெளிவு இருந்தால், தியானம் என்ற பெயரில்எதையாவது செய்து, மனதின் என்ன ஓட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டி இருக்காது..எண்ணம்என்பதற்கும் தியானம் என்பதற்கும் உள்ள உறவை விவாதித்தோம்... எண்ணத்தை கட்டு படுத்துவதுதியானம் அல்ல என பார்த்தோம்..உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், தியானம் என்பதைகண்டு பிடிக்க முடியும்.


எண்ணம் , சிந்தனை, ஆசை எல்லாவற்றிற்கும் உரிய இடம் இருக்கிறது..அதனோடு சண்டை போட வேண்டாம். மனதில் அன்பு இருந்தால், அன்பு மிக்க சமுதாயம் உருவாகும்..அது இல்லாமல், நான் தியானம் செய்தேன் என சொல்வதில் அர்த்தம் இல்லை .எத்தனை ஆசிரம் சென்றாலும்,எத்தனை சாமியார்களை பார்த்தாலும் பயன் ஒன்றும் ஏற்பட போவதில்லை. பிரபஞ்ச சக்தியின்ஒரு நுண்ணிய அங்கமே ஒரு வரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல்மன அலைக்கழித்தலால் விடுபட்டுஅமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும்தெளிவாகக் காண்கிறான்.


உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமேதான் என்றும் உணர்கிறான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். பிரபஞ்ச அறிவின்தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடி வைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் உயர்உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண் ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்திஎதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ் மனசக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்தஉபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொ ண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும்பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும். மருத்துவத்தில் 1.”டெல்டா–Delta” 1 முதல் 4 அலைகள்.2. “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.3. “அல்பா–Alpha”8 முதல் 12 அலைகள்4. “பீட்டா 1–Beta 1 ” 13 முதல் 20 அலைகள்.5.“பீட்டா 2–Beta 2”21 முதல் 40 அலைகள்.6. “க்காமா– Gamma” 41 அலைகளுக்கு மேல். மறை பொருளில் 1 ”டெல்டா– Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.2”டெல்டா–Delta” 1 முதல் 4 அலைகள்–ஞானம்–மிக ஆழ்நிலை தியானம்3 “தீட்டா - Theta” 5 முதல்7 அலைகள்.-சித்து (சித்தர்கள்) ஆழ்நிலை தியானம்.4 “அல்பா–Alpha” 8 முதல் 12 அலைகள்–அல்பாதியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்5 “பீட்டா1–Beta 1 ” 13 முதல் 20 அலைகள். நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.6 “பீட்டா2 – Beta 2” 21 முதல் 40 அலைகள். நாம் பதட்டபடும் நிலை.7 “க்காமா–Gamma” 41 அலைகளுக்குமேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை. எண்ணம்:எண்ணுதல்முடிதல் வேண்டும் - நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்.


வெற்றி பெற்றிட வேண்டும்–உலகிற்குவேதத்தை உணர்த்திட வேண்டும். உடல்நலம் காத்திட வேண்டும் - சிறந்த மருத்துவம் தேர்ந்திடவேண்டும்.அன்பும் கருணையும் வேண்டும் - அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.கலைகளை கற்றிடவேண்டும் - நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.துணையெனும் இல்லறம் வேண்டும் - அவளே சக்தியெனஉணர்ந்திட வேண்டும்.


ஆச்சாரத்தை பின்பற்ற வேண்டும் -.* ஒவ்வொரு மனிதனும் பூரண உடல்நலம்,மனவளம் பெற வேண்டும்.* ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்தஅறிவை பெற வேண்டும்.* பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லாமனிதரும் உணர வேண்டும். * ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கிஉதவி செய்து வாழ வேண்டும்.* பாரதம் வளமான பூமியாக மாற வேண்டும். * தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதிபெற வேண்டும்.* உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய "இறவாமை"எனும் "மரணமிலாப் பெருவாழ்வு" வாழ வேண்டும்.(வள்ளலார்).எந்தத் தெய்வத்திற்குப்பிரார்த்தனை செய்கிறோமோ அதுபலன்தருகிறது.மேலும் ஓர் உண்மையுண்டு. நாம் எந்நிலையில் நம் சக்தி களைச் சேர்த்து முறைப்படுத்துகிறோமோஅந்நிலையில் அம்முறைக்குத் தெய்வீக சக்தியுண்டு. அதுவும் பிரார்த்தனைக்குப் பலன் தரும்.யார் பிரார்த்தனைக்குப் பதில் சொன்னார்கள் என்பது வேறுபடும்.

உடல்:

உடல் என்பது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் ஒருஅற்புத உயிரமைப்பு. அதிலும் மனித உடல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களை விடவும் பரிணாமவளர்ச்சியின் உச்ச கட்டமாகத் தோன்றிய உயிரினம். டார்வினின் பரிணாமக் கொள்கை பேசும்மிக முக்கிய விஷயங்களில் ஒன்று தகவமைப்பு. புறச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நம்உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. புற மாற்றங்களின் போதும், நம் நடவடிக்கைகளின்போதும் உடலில் உருவாகின்ற கழிவுகளையும் உடலே வெளியேற்றுகிறது.


இப்படி வெளியேற்றும்போது உடல் உள்ளுறுப்புகளில் தோன்றும் பலவீனத்தையும் உடலே சரிசெய்து கொள்கிறது. அதுமட்டுமல்ல. தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் (வைட்டமின், மினரல், கால்சியம்..இன்ன பிறசத்துக்கள்) தனக்கு கிடைக்கிற சாதாரண உணவுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறது. நாம்வெளியில் இருந்து உடலுக்கு கொடுக்கும் செயற்கை சத்துக்களுக்கும் உடலே உருவாக்கிக் கொள்ளும்இயற்கை சத்துக்களுக் கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசாயனத்தால் செய்யப்பட்ட செயற்கைசத்துக்களை உடல் கழிவுகளாக மட்டுமே பார்க்கிறது.இதையெல்லாம் கடந்து உடலுடைய நிறைவானவேலை உள்ளுறுப்புகளை மறு உருவாக்கம் செய்வது.


உடலின் ஒவ்வொரு செல்லையும் அதனுடைய ஆயுள்முடிந்தவுடன் புதிய செல்களாக மாற்றுகிறது நம் உடல். உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் குறிப்பிட்டகாலத்தில் முழுமையாக புதிதாக்கப் படுகிறது. சரி. அப்படி உடல் புதிதாக்கப்பட்டால் குறிப்பிட்டகாலத்தில் உடலில் உள்ள எல்லா நோய்களும் மறைந்து விட வேண்டும் அல்லவா? அப்படியென்றால்உலகில் எல்லோருக்குமே நோய்கள் சரியாகிவிட வேண்டுமே? இங்கேதான் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். உடலுடைய புதுப்பிப்பு பணி என்பது இயல்பாக நடந்து கொண்டேயிருக்கும்.உடலுடைய இயல்பான இயற்கையான புதுப்பிப்பு இயக்கத்தில் யாரெல்லாம் குறுக்கிட வில்லையோஅவர்களுக்கெல்லாம் நோய் தானாக சரியாகிவிடும்.


இயக்கத்தில் குறுக்கிடுவது என்றால் என்ன?உடலின் கழிவு வெளியேற்றத்தை தடை செய்வது. ரசாயன மருந்துகளை சாப்பிடுவது. செயற்கை சத்துக்களைஉண்பது போன்றவைதான் நம் குறுக்கீடுகளாகும். அது மட்டுமல்ல; உடலின் இயல்பான தேவைகளானபசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை புறக்கணித்து நம் இஷ்டம் போல் செய்வதும் குறுக்கீடுதான்.பசிக்கிற போது சாப்பிடாமல் பசியில்லாத போது சப்பிடுவது, பசிக்கிற அளவை விட அதிகமாகச்சாப்பிடுவது, தாகமில்லாமல் லிட்டர் லிட்டராக தண்ணீர் அருந்துவது, தாகமிருக்கும் போதுதண்ணீர் அருந்தாமல் இருப்பது அல்லது தண்ணீருக்குப் பதிலாக சுவையூட்டப்பட்ட பானங்களைஅருந்துவது, இரவுகளில் தூக்கத்தை புறக்கணிப்பது, ஓய்வு தேவைப்படும் போது உடல் உழைப்பைஅதிகப்படுத்துவது போன்றவை எல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளாக உள்ளன.


இப்படி இயற்கைக்குமாறான நடவடிக்கைகள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதிக்கின்றன. ஆரோக்கியமாக உருவாக வேண்டியசெல்கள் பலவீனமாக, பழைய நோய்க்கூறுகளுடன் உருவாகின்றன. ஆக நம்முடைய எல்லா தொந்தரவுகளுமேஉடலுடைய இயல்பான இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அவை புறச் சூழல்களுக்கு ஏற்றாற்போல்தானாகத் தோன்றி தானாக மறைபவை. நம்முடைய பொறுப்பான குறுக்கீடுகளால் நோய்களாக உடலில்தங்கி விடுகின்றன. மனதில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளும் புறச்சூழல்களை தகவமைப்பதற்காகதானாகவே ஏற்படுபவை. அவற்றை நாம் சரிசெய்ய வேண்டிய தில்லை. அப்படி சரிசெய்கிறோம் என்றபோர்வையில் மனதின் இயக்கத்தில் நாம் குறுக்கிடுகிற போது உணர்ச்சிகள் தங்கிவிடுகின்றன.கால நீட்சியடைகின்றன.


ஆக மனதும், உடலும் வெவ்வேறானவை அல்ல. இரண்டின் இயங்கு முறைகளும்ஒரே மாதிரியானவைதான். நாம் உடலின், மனதின் மாறுதல்களை வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமேஅதனுடைய தீர்வாக அமையும். மனதைப் பொறுத்த வரை அமைதியடைகிறது. உடல் தன் ஆரோக்கியத்தைஅடைகிறது.அதெல்லாம் சரி. இப்படி இயற்கையான முறையில் வாழ்வதால் நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே வந்து விட்ட நோய்களை என்ன செய்வது? ஏற்கனவே இருக்கின்ற தொந்தரவுகள்என்பவையும் உடலால் செய்யப்படுகின்ற தகவமைப்பு வேலைதான். அதற்காக புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை.


உடலை அதன் போக்கில் அனுமதிப்பதோடு, இயற்கையான வாழ்வியல் முறைக்குத் திரும்புவதுதான்ஆரோக்கியம் பெற ஒரே வழி.இந்த முறைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் முன்பு நாம் பார்த்தமோரீஸ் குட்மேனைப் போலவோ, மர்பியைப் போலவோ அற்புத குணங்களைப் பெற முடியுமா? அப்படிபெற வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களை கடை பிடிப்பது மட்டுமின்றி மனதின் இயக்கத்தையும்புரிந்து கொள்ள வேண்டும். மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் முழு சக்தியையும்நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை அமெரிக்க மரபியல் விஞ்ஞானி டாக்டர்.புரூஸ்லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன.


நம் உடலின் செல்கள் மட்டுமல்லஅதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பதுதான் மரபியலின்இன்றைய கண்டுபிடிப்பாகும்.நம் உடலுடைய முழு சக்தியையும் தொந்தரவுகளின் பக்கம் திருப்பிஎவ்வாறு நாம் ஆரோக்கியத்தைப் பெறுவது என்பதைப் பார்ப்போம்.நம் உடலின் ஆரோக்கியத்தைநிலைப்படுத்துகிற வேலையை பராமரிப்பு சக்தி(இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்திஎன்று அழைக்கிறார்கள்) செய்து வருகிறது. நம் உடல் செல்களில் புறச்சூழல் காரணமாக ஏற்படுகிறஏற்றத்தாழ்வுகளை பராமரிப்பு சக்தி சமநிலைப் படுத்துகிறது.


இந்த பராமரிப்பு சக்தியின்ஒரே வேலை சமநிலைப் படுத்துவதுதான். சமநிலைப் படுத்துவது என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல;மனம் சார்ந்ததும் தான். நம் உடலின் பராமரிப்பு சக்தி மனச் சமநிலை தவறினாலும், உடல்சமநிலை தவறினாலும் அதை சமப்படுத்துகிறது.உடல் சமநிலை தவறுவது என்பது தகவமைப்பு வேலைநடைபெறும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் தான் என்பது புரிகிறது. ஆனால் மனச் சமநிலைதவறுவது என்றால் என்ன?மனச்சமநிலை தவறுதல் என்பது உணர்ச்சி வசப் படுவதைத்தான் குறிக்கிறது.உணர்ச்சிகள் என்பவை புறச் சூழல்களால் தானாகத் தோன்றி தானாக மறைபவை. அதாவது மனதுடையதகவமைப்பு. அப்படி தானாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை சரிசெய்கிறோம் பேர்வழி என்று நாம்பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது அந்த உணர்ச்சிகள் நிலைத்து விடுகின்றன.


இதைத்தான் கிராமங்களில்உணர்ச்சி வசப்படுதல் அல்லது ”உணர்ச்சியின் வசம் நாம் போய்விடுவது” என்று கூறுவார்கள்.ஒருதொந்தரவு ஏற்படுகிற போது பராமரிப்பு சக்தி உடலை சமநிலைப்படுத்த தயாராகிறது. நம் உடலில்தொந்தரவுகள் ஏற்படுகிற போது நம் மனநிலை என்னவாக இருக்கும்? இது கேன்சராக இருக்குமோ?இது சர்க்கரையாக இருக்குமோ? என்ற பயம் ஏற்பட்டு மனப்பதட்டம் வந்து விடுகிறது. இந்தபய உணர்ச்சியை நாம் நொடிக்கு நொடி புதுப்பித்துக் கொள்கிறோம். இப்போது மனச்சம நிலையும்குலைந்து விடுகிறது.


உடலில் ஏற்படும் ஒரு தொந்தரவு அதைப்பற்றிய நம் புரிதல் இன்மையால்மனச் சமநிலையையும் பாதிக்கிறது. இப்போது பராமரிப்பு சக்தி என்ன செய்யும்?இப்படி பராமரிப்புசக்தி உடலையும், மனதையும் சமப்படுத்த இரண்டாகப் பிரிகிறது. பொதுவாக பராமரிப்பு சக்திஉடலை விட மனதிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


உடல் பாதிப்பு எந்த அளவில்இருந்தாலும், மனபாதிப்பின் தன்மையைப் பொறுத்துத்தான் பராமரிப்பு சக்தி வேலை செய்கிறது.மனச்சமநிலை தீவிரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தால் உடல் ஆரோக்கி யத்தை இரண்டாம் பட்சமாகக்கருதி மனதை நிதானப் படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது பராமரிப்பு சக்தி.இந்தபராமரிப்பு சக்தியை நாம் உடலை நோக்கி முழுமையாகத் திருப்பி விட்டால் என்ன நடக்கும்?உடல் உள்ளுறுப்புக்களின் தகவமைப்பு மிக வேகமாக நடக்கும்.


உடல் ஆரோக்கியத்திற்குத் திரும்பும்.ஆனால் அப்படி எவ்வாறு உடலை நோக்கித் திருப்பி விடுவது?மிகச் சுலபம்தான். உடலுடைய சமநிலக்குலைவுஎன்பது இயற்கையானது. அதனை நம் முயற்சியால் மாற்ற இயலாது. மாறாக அது உடலின் தகவமைப்புதான். கழிவுகளின் வெளியேற்றம் தான் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால்என்ன நடக்கும்? உடல் சமநிலைக்காக புரிதலோடு காத்திருப்போம். இப்போது மனநிலையின் தன்மைஎன்னவாக இருக்கும்? உடல் மாறுதல்கள் இயற்கையானவை என்று புரியும் போது மனம் சமநிலை தவறுவதில்லை.அதைப்பற்றிய பயம் ஏற்படுவதில்லை. ”என்னுடைய உடல் என்னை சரி செய்து கொண்டிருக்கிறது”என்பதை நம்மால் உணர முடியும். இப்போது பராமரிப்பு சக்தி நூறு சதமும் உடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது.


உடல் மிக வேகமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதுப்பித்துக் கொள்கிறது. மோரீஸ் குட்மேனைப்போலவும், டாக்டர்.மர்பியைப் போலவும் எல்லோராலும் புரிதலால் நோய்களை வெல்ல முடியும்.உடல்ஆரோக்கியத்தில் நம்முடைய பங்கு என்பது அதனைப் புரிந்து கொள்வதுதான். அதனுடைய இயக்கங்களில்குறுக்கிடுவது அல்ல. இயற்கையான பழக்கவழக்கங்கள், உடலைப் பற்றிய புரிதல் ஆகியவை மனிதகுலஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவற்றைத் தவற விடுகிற மருத்துவங்களால் உடல்நலத்தை மீட்க முடியாது .

No comments:

Post a Comment